இதை எதிர்த்து, கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. குடியுரிமை சட்ட விதிகள் அரசியலமைப்புக்கு விரோதமானது. மதம் மற்றும் நாட்டை அடிப்படையாக கொண்டு வகைப்படுத்துவது பாரபட்சமானது,நியாயமற்றது, மதசார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது. இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் எந்த அவசரமும் ஏற்படவில்லை. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.