ராஞ்சி: ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டம் மாவோயிஸ்ட் தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது. இந்த மாவட்டத்தின் சரண்டா, கோல்ஹான் வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் அமைப்பினர் செயல்பட்டு வந்தனர். சிங்பூமில் மாவோயிஸ்ட் பாதித்த பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு பிறகு மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சரண்டா, கோல்ஹான் வனங்களில் இயங்கி வந்த மாவோயிஸ்ட்கள் 12 பேர் நேற்று பாதுகாப்பு படையினரிடம் நேற்று சரணடைந்தனர்.