இந்நிலையில் கடந்த 11ம் தேதி இரவு ஹரீஸ், கவிதாவின் 8 சவரன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார். ஹரீஸ் குறித்து அவரது நண்பர்களிடம் கவிதா விசாரித்த போது அவர் தனது அத்தை மகளை திருமணம் செய்யச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கவிதா மடிப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் தன்னை ஏமாற்றிய ஹரீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனது நகை பணத்தை மீட்டுத் தரக் கோரியும் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரீசை தேடி வருகின்றனர்.