சென்னை : கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனையை தடுக்க பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் போட்டி நுழைவுச்சீட்டுகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. புகாரை பரிசீலித்து முடிவெடுக்க பிசிசிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.