கல்வீச்சு தாக்குதலில் காயம்; மீண்டும் இன்று பிரச்சாரத்தை தொடங்கினர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி!

ஆந்திர: ஆந்திராவில் பேருந்து யாத்திரையின்போது முதலமைச்சர் ஜெகன்மோகன் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். அடையாளம் தெரியாத நபர் கல்வீசியதில் ஜெகன்மோகனின் நெற்றியில் காயம் ஏற்பட்டது. தேர்தலை ஒட்டி வேட்பாளர்களை ஆதரித்து பேருந்து யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ஜெகன்மோகன். ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, பேருந்தில் பயணம் செய்தபடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். கடப்பா மாவட்டம் இடுபுலுபாயாவில் இருந்து ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரம் வரை 21 நாள் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

விஜயவாடாவில் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டபோது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு பிரசார பேருந்தில் இருந்த டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். முதலமைச்சருக்கு அருகில் இருந்த எம்.எல்.ஏ. வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தையடுத்து நேற்று ஜெகன் மோகன் ரெட்டி பிரசாரத்தில் ஈடுபடவில்லை. ஒருநாள் ஓய்வுக்குப் பிறகு இன்று மீண்டும் பிரசாரத்தை தொடங்கினார். என்.டி.ஆர். மாவட்டத்தின் கேசரபள்ளியில் இருந்து தனது பிரசார பேருந்தில் பிரசார பயணத்தை தொடங்கிய அவர், ஆட்கூர், வீரவள்ளி கிராஸ், அனுமன் சந்திப்பு மற்றும் பிற கிராமங்கள் வழியாக செல்கிறார். ஆந்திராவில் 175 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 13-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

 

Related posts

ஆர்எஸ்எஸ் உடனான மோதலுக்கு மத்தியில் ஓபிசி, தலித், பெண் தலைவர்களை தேடும் பாஜக: மகாராஷ்டிரா, அரியானா தேர்தலுக்கு முன் நியமிக்க முடிவு

குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் படுகாயம் ஒரு தீவிரவாதி பலி.! ‘காஷ்மீர் டைகர்’ என்ற அமைப்பு பொறுப்பேற்பு