தெலுங்கானா: இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அழிக்க பாஜக முயற்சி செய்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க முயற்சி செய்வதாக தெலுங்கானாவின் நிர்மலில் ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார். நாடு விடுதலை பெற்ற பின் ஏழைகளுக்கு ஏதாவது கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் அரசியலமைப்புச் சட்டம்தான். அரசியல் சட்டத்தை ஒழித்து விடுவோம் என்று பகிரங்கமாகவே பாஜகவினர் பேசுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.