சென்னை: கல்லூரிப் படிப்பை கைவிட்டு இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுப்பட்ட தலைசிறந்த நாட்டுப்பற்றாளர் காயிதே மில்லத் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என அரசியல் நிர்ணய அவையில் ஆணித்தரமாக வாதாடிய மொழிக்காவலர். தொகுதிக்கு செல்லாமலே போட்டியிட்ட தேர்தலில் எல்லாம் வெற்றிபெறக்கூடிய அளவுக்கு செல்வாக்கு கொண்டிருந்த தலைவர் என முதல்வர் கூறியுள்ளார்.