இது பெறுத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் மூலம் எழுதி இருந்தார். வாக்களித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் பதிவான வாக்குகளின் உண்மையான சதவீதத்தை உடனே வெளியிட வலியுறுத்தி I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் நாளை மாலை இந்திய தேர்தல் ஆணையத்தில் நேரில் முறையிட உள்ளனர். அத்துடன் மத மோதலை உருவாக்குகின்றன பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசும் பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தும் நாளை இவர்கள் மனு அளிக்க உள்ளனர். கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதான போதும் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது விசாரணை முகமைகள் எடுக்கும் நடவடிக்கைகளை தடுக்கக் கோரி I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் நேரில் முறையிட்டது குறிப்பிடத்தக்கது.