இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரானார் பிரக்ஞானந்தா: விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி அசத்தல்

டெல்லி: இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்துள்ளார். நெதர்லாந்தில் நடந்து வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின் 4வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி அசத்தினார்.

இதன்மூலம் இந்திய தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார். இந்த அபார வெற்றியின் மூலம் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி முதன்முறையாக முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

ஃபிடே-வின் மதிப்பீட்டு புள்ளிகள் படி பிரக்ஞானந்தா 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை முந்தி சாதனை படைத்தார். லைவ் ரேட்டிங் புள்ளிப் பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளிகள் பெற்ற நிலையில் பிரக்ஞானந்தா 2748.3 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களின் வாயிலாக தமிழ்நாடு இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக திகழ்கிறது.! அரசு பெருமிதம்

எளாவூர் பகுதியில் அனுமதி இன்றி கொண்டுவரப்பட்ட 38கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது

முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் ஜாமினை ரத்து செய்யக் கோரி மனு..!!