இந்நிலையில் எம்எல்ஏ கிருஷ்ண கல்யானிக்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அவர் அளவுக்கதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வந்த புகாரை அடுத்து வருமான வரித்துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டனர். ராய்கன்சில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.