வேறு ஒருவருடன் தகாத உறவு விவாகரத்து கேட்டு மிரட்டும் தெலுங்கு சின்னத்திரை நடிகை

*கணவர் பரபரப்பு பேட்டி

திருமலை : தெலுங்கு சின்னத்திரையில் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர் அடலா ஐஸ்வர்யா. இவரது கணவர் ஷியாம்குமார். இவர் நேற்றுமுன்தினம் விசாகப்பட்டினத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:காப்பு மேட்ரிமோனி ஆன்லைன் இணையதள திருமண பொருத்தம் மூலம் ஐஸ்வர்யாவை கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டேன். திருமணமான ஒரு மாதத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ஐதராபாத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனருடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருப்பது எனக்கு தெரிய வந்தது. ஆனால், அதற்குள் ஐஸ்வர்யா எனது வங்கியில் இருந்த ரூ.25 லட்சத்தை எடுத்து கொண்டார்.

மேலும், திருமணத்திற்கு புறம்பான உறவு குறித்து கேட்டதற்கு விவாகரத்து வழங்க கோரி தன்னையும், தனது பெற்றோரையும் மிரட்டி மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். தற்போது பிரபல தெலுங்கு டிவிக்களில் ஒளிபரப்பாகும் பல தொடர்களில் ஐஸ்வர்யா நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது கணவர் தனக்கு நீதி வேண்டும் என்று நிருபர்களிடம் இந்த தகவலை கூறி இருப்பது தற்போது சின்னத்திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related posts

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மக்களவை தேர்தலில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை!