நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

சென்னை: நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட இமெயில் ஐடிகளை டேக் செய்து ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இன்றைய தினம் சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தை வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஏற்கனவே பள்ளி, மால்கள், விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற மிரட்டல்களை கண்டு பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

ராஜீவ் காந்தி நினைவு தினம் : காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

ஒரு யுக மாற்றத்திற்கு தமிழர்கள் தயாராக வேண்டும்: கவிஞர் வைரமுத்து

சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியது: வராக நதிக்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை