ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தை வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஏற்கனவே பள்ளி, மால்கள், விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற மிரட்டல்களை கண்டு பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.