ஹிஜாப் அணிதலில் விதிமீறல் ஈரானில் 2 நடிகைகள் மீது வழக்கு?

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் அணிதலில் விதிமீறி செயல்பட்ட இரு நடிகைகள் மீது வழக்கு பதிவு செய்வது தொடர்பாக அந்நாட்டு போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். ஈரானில் ஹிஜாப் ஆடை அணிதல் தொடர்பான விதிகளை பின்பற்றாத பெண்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஹிஜாப் ஆடை அணிதலை எதிர்த்து பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. தற்போது போராட்டங்கள் ஓய்ந்த நிலையில், மீண்டும் ஹிஜாப் விவகாரம் ஈரானில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன் ஈரான் முன்னணி நடிகைகள் கட்டயோன் ரியாஹி (61), பாண்டேயா பஹ்ராம் (53) ஆகியோர் பொது இடத்தில் தாங்கள் அணிந்திருந்த ஹிஜாப் ஆடையை அகற்றியும், இணையத்தில் அதன் புகைப்படங்களை வெளியிட்டனர். வெவ்வெறு இடங்களில் மேற்கண்ட இரு நடிகைகளும், தங்களது ஹிஜாப்பை அகற்றி (தலையில் முக்காடு அணியவில்லை) புகைப்படம் வெளியிட்டதால் அவர்கள் மீது தெஹ்ரான் போலீசார் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். அதற்கான சட்ட நடவடிக்கையில் காவல் துறை இறங்கியுள்ளதாகவும், ஒரு வேளை இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டால், அவர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

திருப்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று சாதனை!

சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் பயிர்கள் சேதம்..!!

திண்டுக்கல், மதுரையில் 5 செ.மீ. மழைப்பதிவு..!!