சென்னை: ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் நடிகர் ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 3 நாளில் விசாரணை நீதிமன்றத்தில் சரணடையவும் நடிகர் ரூசோவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூசோவுக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் தந்ததை எதிர்த்து காவல்துறை தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.