அப்படிப்பட்ட கடினமான பகுதியை கைப்பற்றி பாதுகாக்க 1984ம் ஆண்டு ஆபரேஷன் மேகதூத் செயல்படுத்தப்பட்டது. இதில் இந்திய ராணுவம் மிகச்சிறப்பாக, மிக விரைவாக செயல்பட்டு 1984ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி சியாச்சினை முழுமையாக கைப்பற்றியது இந்தியா வசமாக்கியது. அங்கு இந்திய ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டு தற்போது 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இப்பகுதியில் போரால் இறந்த வீரர்களை விட பனியால் வீரமரணமடைந்த வீரர்களே அதிகம். தற்போது சியாச்சினில் ராணுவ கட்டமைப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, வீரர்களின் பாதுகாப்பிற்கு தேவையான பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் ராணுவம் கவனம் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு வீரர்களுக்கும் கையடக்க வானிலை கண்காணிப்பு கருவி வழங்கப்பட்டுள்ளன. அவை சரியான நேரத்தில் வானிலை புதுப்பிப்புகளை வழங்குகின்றன மற்றும் சாத்தியமான பனிச்சரிவுகள் பற்றி எச்சரிக்கின்றன.