தமிழகத்தில் கனமழை காரணமாக 15 பேர் உயிரிழப்பு: பேரிடர் மேலாண்மைத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் மே 16 முதல் 22 வரை கனமழை காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை தகவல் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட
ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 4.05 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு காற்று, கடல் சீற்றம் குறித்து எச்சரிக்கை தகவல் வழங்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 296 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் தயார்நிலையில் உள்ளது என்று பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து