சென்னை: தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்காலில் நாளை முதல் மே 26-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளனர்.