இதே போல, தேர்வு செய்யப்பட்ட 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை மட்டும் மொத்த வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கு பதிலாக 100 சதவீத ஒப்புகை சீட்டுகளையும் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுமென சமூக ஆர்வலர் அருண் குமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்னணு வாக்கு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு தொடர்பான அனைத்து வழக்குகளையும் வரும் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா அமர்வு நேற்று உத்தரவிட்டுள்ளது.