இவர்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 15ம் தேதி நடைபெறும். தமிழ்நாடு சிறை பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்த துறையின் சிறை அலுவலர்(ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர்(பெண்கள்) பதவியில் காலியாக உள்ள 8 பணியிடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வில் 32 பேர் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கல்வி பணியில் அடங்கிய நிதியாளர் பதவியில் காலியாக உள்ள 5 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 20 பேர் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதே போல தமிழ்நாடு மீன்வள சார்நிலை பணியில் அடங்கிய மீன்துறை சார் ஆய்வாளர் பதவியில் காலியாக உள்ள 24 பணியிடத்துக்கு நடத்ப்பட்ட தேர்வில் 2557 பேர் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதே போல தமிழ்நாடு பொது சார்நிலை பணியில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர்(மாற்று திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் பதவி) பதவியில் காலியாக உள்ள 7 பணியிடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வில் 203 பேரின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.