குட்கா விவகாரம்: முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மீதான வழக்கு மார்ச் 21க்கு ஒத்திவைப்பு

சென்னை: குட்கா விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவுக்கு எதிராக ED தொடர்ந்த வழக்கு மார்ச் 21க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ வழக்கு அடிப்படையில் பி.வி.ரமணா, ஒன்றிய அரசு, மாநில அரசு ஊழியர்கள் உட்பட 27 பேர், 4 நிறுவனங்கள் மீது ED வழக்குப்பதிவு செயதுள்ளது. சிபிஐ தாக்கல் செய்ய உள்ள கூடுதல் குற்றப்பத்திரிக்கைக்கு பின்னர் அதன் அடிப்படையில் விசாரணை என்று அமலாக்கத்துறை தெரிவித்தது. இதையடுத்து வழக்கு விசாரணையை மார்ச் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மலர் வாலன்டினா உத்தரவிட்டார்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு