குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருள்கள் உடல்நலத்திற்கு கேடு என்பதால், 2013 முதல் தமிழகத்தில் அதனை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குட்கா மீதான தடை 2013-ல் கொண்டுவரப்பட்டு ஆண்டுதோறும் நீட்டிக்கப்படுகிறது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்;
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதால், விநியோகம், பதுக்கலுக்கான தடை அடுத்தாண்டு மே 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தால் புகையிலை பொருள்களை பறிமுதல் செய்வதோடு மட்டுமன்றி ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.