போர்ஸ் நிறுவனம் குர்கா என்ற 3 கதவுகள் கொண்ட எஸ்யுவியை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. ஆனால் பிஎஸ்6 இன்ஜின் தர நிலை அமலுக்கு வந்ததை தொடர்ந்து அதன் உற்பத்தியை கடந்த ஆண்டு ஏப்ரலில் நிறுத்தி விட்டது. தற்போது மீண்டும் புதிய தர நிலைகளுக்கு ஏற்ப 3 கதவுகள் மற்றும் 5 கதவுகள் கொண்ட குர்கா எஸ்யுவியை அறிமுகம் செய்ய போர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யுவியில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் 2.6 லிட்டர் டீசல் இன்ஜின் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 91 எச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 சீட், 6 சீட் மற்றும் 7 சீட் என மூன்று வேரியண்ட்களில் வெளியாகலாம் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.