தெங்னோபாலின் சவங்பாய் பகுதியில் நேற்று காலை போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மீதான தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரையும் விடுவிக்க கோரி உள்ளூரை சேர்ந்த பெண் ஒருவர் தகராறில் ஈடுபட்டார். இந்நிலையில் தீவிரவாதிகள் என சந்தேகப்படும் நபர்கள் பாதுகாப்பு படையினர் மீது மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். வீரர்களும் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்தனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
வெளிநாட்டு கூலிபடையினரா?
மணிப்பூரில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பாதுகாப்பு படை வீரர்களை முதல்வர் பைரன் சிங் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்த செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,‘‘மோரே நகரில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மியான்மரை சேர்ந்த வெளிநாட்டு கூலிப்படையினர் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. தீவிரவாதிகள் அதி நவீன ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர். இவற்றை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.