ஆனால் அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராம்ஜி லால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், தீபங்கர் தத்தா, கே.வி.விஸ்வநாதன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘ராஜஸ்தான் அரசு கொண்டு வந்த ‘இரண்டு குழந்தைகள் கொள்கை’ தொடர்பான சட்டம் செல்லும். இந்த சட்டம் பாரபட்சமானது கிடையாது. மேலும் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது.
எனவே இந்த விவகாரத்தில் முன்னாள் ராணுவ வீரர் ராம்ஜி லால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்தனர். முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் பாதுகாப்புப் படையில் இருந்து ஓய்வு பெற்ற ராம்ஜி லால், ராஜஸ்தான் காவல்துறையில் கான்ஸ்டபிள் பதவிக்கு 2018ம் ஆண்டு மே மாதம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் ஜூன் 1, 2002ம் ஆண்டுக்குப் பிறகு அவருக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்ததால், ராஜஸ்தான் காவல்துறை துணை சேவை விதிகள், 1989இன் கீழ் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பதல், ராம்ஜி லால் நீதிமன்றங்களை அணுகியது குறிப்பிடத்தக்கது.