கொல்கத்தா: மேற்குவங்கம் மாநிலம் கூச் பெஹர் பகுதிக்கு அம்மாநில ஆளுநர் ஆனந்தபோஸ், வரும் 18, 19 தேதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், அவர் செல்ல வேண்டாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அங்கு வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்க இருப்பதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதை சுட்டிக்காட்டி அறிவுறுத்தப்பட்டுள்ளது.