தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது. தங்கம் விலை ஒரு நாள் குறைவதும், மீண்டும் அதே வேகத்தில் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.5,565க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.44,520க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,600க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,800க்கும் விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுவது நகை வாங்குவோருக்கு குழப்பமான நிலையை உருவாக்கியுள்ளது.

Related posts

14ம் தேதி 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

வேளாண்மை அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு ரிசல்ட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்

நாகை-இலங்கை கப்பல் சேவை நாளை முதல் மீண்டும் துவக்கம்: இன்று சோதனை ஓட்டம்