உக்ரைன் பாதுகாப்புத்துறை வௌியிட்ட இந்த படம் சமூகவலை தளங்களில் வௌியாகி கடும் சர்ச்சையை எழுப்பியதுடன், உக்ரைன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த படம் நீக்கப்பட்டது. இதுகுறித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் தபரோவா வௌியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வௌியிட்ட ட்விட்டர் பதிவுக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கோருகிறோம். இந்தியாவின் தனித்துவமான கலாச்சாரத்தை உக்ரைன் மக்கள் மதிக்கின்றனர். சர்ச்சைக்குரிய பதிவு நீக்கப்பட்டு விட்டது. இந்தியாவுடனான நட்புறவை மேலும் வலுப்படுத்த உக்ரைன் விரும்புகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.