சென்னை: மாணவிகள் தந்த பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புகார் குறித்து விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. நீதிபதி கண்ணன் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக உடனடியாக பரிசீலிக்க கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.