சிறுமிக்கு பாலியல் தொல்லை கல்லூரி மாணவன் போக்சோவில் கைது

பெரம்பூர்: ஓட்டேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவன் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் 34 வயது பெண். இவரது 17 வயது மகள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஓட்டேரி தாசமகான் பகுதியைச் சேர்ந்த அப்ரோஸ் (21) என்ற கல்லூரி மாணவனுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அப்ரோஸ் அடிக்கடி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்ரோஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்திருந்தார். அதன்பேரில், நேற்று முன்தினம் அப்ரோஸை போக்சோவில் கைது செய்தனர்.

Related posts

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து