கனடாவில் இன்று முதல் மீண்டும் விசா சேவை: இந்திய தூதரகம் அறிவிப்பு

டொராண்டோ: கனடாவில் சில விசா சேவைகளை இன்று முதல் மீண்டும் தொடங்குவதாக இந்தியா தெரிவித்துள்ளது. கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது குற்றம் சாட்டினார். இதனால் இருநாடுகள் இடையே தூதரக உறவு முற்றிலும் சீர்குலைந்தது. மேலும் கனடா மக்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்தி வைத்தது. இதையடுத்து இருநாட்டு உறவுகளை சரிசெய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு கட்டமாக மீண்டும் கனடாவில் விசா சேவையை தொடங்குவதாக இந்திய தூதரகம் அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக இந்திய தூதரக ட்விட்டர் தளத்தில்,’ கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இன்று முதல் நுழைவு விசா, வணிக விசா, மருத்துவ விசா மற்றும் கருத்தரங்கு விசா சேவைகள் மீண்டும் தொடங்கும்’ என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தின் தீ விபத்து

ஜெகன்மோகன் முகாம் அலுவலகம் இருந்த சாலையில் கட்டுப்பாடுகளை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நடவடிக்கை

மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் குடிநீர் பஞ்சத்தால் நலியும் கிராமங்கள்: ஆபத்தான கிணறுகளில் தண்ணீர் சேகரித்து அல்லலுறும் பெண்கள்