இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 17.08.2001 அன்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்து நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பளித்தார். இதில், குற்றவாளிகளான ஜானகிராமன், அவரது மனைவி வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், மேற்படி வருமானத்திற்கு அதிகமாக குற்றவாளிகளால் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்து அரசிடம் ஒப்படைக்கும்படி அதிரடியாக தீர்ப்பளித்து உத்தரவிட்டார். ஜானகிராமன் அவரது பெயரிலும், அவரது மனைவி வசந்தி பெயரிலும் வில்பட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் வாங்கிய சொத்துக்களின் தற்போதைய மொத்த மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் என்பது குறிப்பிடதக்கது.