ஆனால் இது பொய் வழக்கு எனக்கூறி சந்திரபாபு உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த இந்த வழக்கை ரத்து செய்து அவருக்கு எதிராக தீர்ப்பு வந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு வழக்கை ரத்து செய்வதற்கான மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. இந்நிலையில், சந்திரபாபு நாயுடு கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மனைவி புவனேஷ்வரி நேற்று ராஜமகேந்திரவரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
இதற்கு ‘சத்யமேவ ஜெயதே’ என்று பெயரிடப்பட்டது. அவருக்கு ஆதரவாக சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவும், அவரது மகன் நாரா. லோகேஷ் டெல்லியிலும், மைத்துனர் பாலகிருஷ்ணா மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பல இடங்களில் உண்ணாவிரதம் இருந்தனர்.