போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், வணிக வளாகத்தில் மின் இணைப்பு பணிகள் நடந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதேபோல, தானே அம்பர்நாத் பகுதியில் உள்ள குடிசை வீட்டில் சிலிண்டர் வெடித்துச் சிதறி தீவிபத்து ஏற்பட்டது. குடிசை வீடு என்பதால் தீ கொளுந்து விட்டு எரிந்ததுடன், அந்த பகுதியை கரும்புகை சூழ்ந்தது. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்த்தனர். இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.