இதனிடனையே மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்ததால் சென்னை கடற்பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த தருவைகுளத்தை சேர்ந்த மீனவர்கள் ஓரு நாள் மட்டும் தூக்குப்பாலத்தை திறக்குமாறு மீன்வளத்துறை முதன்மை செயலாளருக்கு அவசர மனு அளித்தனர். மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தூக்குப்பாலம் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக தூக்குப்பாலம் வழியாக அணிவகுத்து சென்றனர். இதனை அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.