சிவகாசி: பட்டாசு விபத்தில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். 10 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முத்து, ஆவுடையம்மாள், லட்சுமி, பேச்சியம்மாள் ஆகியோரது உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். தலா 10 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்க காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் கோரிக்கை வைத்தனர்.