நாகை: நாகை அருகே பாஜகவினர் வெடிவைத்து குடிசை வீடுகள் எரிந்த விவகாரத்தில் பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது. நாகை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்க வைத்த சரவெடியால் குடிசை வீடுகள் எரிந்து நாசமானது. வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் வி.ஏ.ஓ. கொடுத்த புகாரின்பேரில் பாஜகவினர் மீது காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கிடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.