வேலூர்: வேலூர் தொரப்பாடியில் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகம், சுற்றுப்புற பகுதிகளில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4 வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.