அண்ணாமலை, முத்து உள்ளிட்ட பிரபலமான படங்களில் நடித்த பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார்..!!

ஐதராபாத்: பிரபல நடிகர் சரத்பாபு (வயது 71) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். நடிகர் சரத்பாபு உடல்நல குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. 1973-ம் ஆண்டு ராமராஜ்யம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சரத்பாபு. தமிழில் “நிழல் நிஜமாகிறது” என்ற இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய திரைப்படத்தில் அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்தவர்.

தமிழில் ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, சிப்பிக்குள் முத்து, சங்கர்குரு, கஜேந்திரா, அருள், புதிய கீதை, ஆளவந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ரஜினியுடன் முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களில் நடித்து சரத்பாபு பிரபலமானவர். கமலுடன் சட்டம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட படங்களில் சரத்பாபு நடித்துள்ளார். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். சரத்பாபு இறுதிச் சடங்கு சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தகவல் வெளிவந்துள்ளது.

Related posts

பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதால் யமுனோத்ரி புனித யாத்திரையில் தள்ளுமுள்ளு: பயணத்தை ஒத்திவைக்க காவல்துறை வேண்டுகோள்

அமேதி, ரேபரேலியில் காங். அமோக வெற்றி பெறும்: முன்னாள் முதல்வர் நம்பிக்கை

கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை வென்ற கீர்த்தி ஆசாத், யூசுப் பதான் தேர்தலில் வெல்வார்களா?: மேற்குவங்க தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு