இதற்கிடையே அந்த பெண்ணின் கணவர் வேலைக்காக ராஞ்சிக்கு சென்றுவிட்டார். வீட்டில் 3 குழந்தைகளுடன் இருந்த பூஜா மஹதோ, மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். பின்னர் தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, அப்பகுதியில் இருந்த கிணற்றில் 3 குழந்தைகளையும் தூக்கி வீசிக் கொன்றுவிட்டு, தானும் அந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையறிந்த அப்பகுதியினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மீட்புப் படையின் உதவியுடன் கிணற்றில் மூழ்கிய 3 குழந்தைகள், பூஜா மஹதோ ஆகியோரின் சடலங்களை மீட்டனர். நான்கு பேரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அந்தப் பெண்ணின் கணவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.