நெருக்கமான போட்டோக்களை பேஸ்புக்கில் வெளியிட்டதால் இளம்பெண் தற்கொலை: காதலன் மீது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் காதலை கைவிட்டதால் காதலியை பழி வாங்குவதற்காக, ஒன்றாக எடுத்த புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டு அவமானப்படுத்தியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள கடுத்துருத்தி பகுதியை சேர்ந்தவர் ஆதிரா (22). அதே பகுதியை சேர்ந்தவர் அருண் வித்யாதர் (26). 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இதையடுத்து 2 பேரும் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கும் ஒன்றாக சுற்றி திரிந்தனர். அப்போது 2 பேரும் சேர்ந்து நெருக்கமாக பல போட்டோக்களையும் எடுத்து கொண்டனர்.

இந்தநிலையில் அருண் வித்யாதரின் நடவடிக்கை சரியில்லை என்று தெரிகிறது. இது பிடிக்காததால் அவருடனான தொடர்பை ஆதிரா துண்டித்துவிட்டார். இது அவருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆகவே ஆதிராவை பழி வாங்க திட்டமிட்டார். அதன்படி 2 பேரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட நெருக்கமான போட்டோக்களை அருண் பேஸ்புக்கில் வெளியிட்டார்.
இந்த தகவல் அறிந்ததும் ஆதிரா மிகுந்த மன வேதனை அடைந்தார். இதையடுத்து நேற்று ஆதிரா தனது வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து ஆதிராவின் பெற்றோர் கடுத்துருத்தி காவல் நிலையத்தில் அருணுக்கு எதிராக புகார் மனு ஒன்றை அளித்தனர். இந்த புகார் மனுவில், தங்களது மகளின் தற்கொலைக்கு அருண் தான் காரணம் என்று குறிப்பிட்டு இருந்தனர். இதையடுத்து கடுத்துருத்தி போலீசார் அருணுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

செங்கல்பட்டில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது: 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை