ஆற்றல்மிகு தளகர்த்தராகச் செயல்பட்ட அவரது இழப்பு சொல்லொணாத் துயரத்தைத் தருகிறது. அவரது பிரிவால் வாடும் ம.தி.மு.க. தொண்டர்களுக்கும், திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார். ஈரோடு தொகுதியின் சிட்டிங் எம்.பி.யாக இருந்த கணேசமூர்த்தி இன்று காலை மாரடைப்பால் இயற்கை எய்தினார். அவரது உடல் சொந்த ஊரான குமாரவலசிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்கு நடைபெறுகிறது. மதிமுக.தொடங்கப்பட்டதில் இருந்து ஈரோடு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த கணேசமூர்த்தி, மதிமுகவின் பொருளாளராகவும் இருந்துள்ளார். இதுவரை மூன்று முறை எம்.பி. மற்றும் ஒருமுறை எம்எல்ஏ-வாக பதவி வகித்துள்ளார்.