ஈரோடு அந்தியூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 5.50 ஏக்கர் அரசு நிலம் மீட்பு..!!

ஈரோடு: அந்தியூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 5.50 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. ஓடையை ஒட்டியுள்ள பகுதிகளை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதை மீட்க கனகராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அதை மீட்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சுமார் 5.50 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை அரசு மீட்டது. மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள 6.10 ஏக்கர் நிலம் 2 நாட்களில் மீட்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்