இதுகுறித்து அறிந்ததும் கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயம் அடைந்த செல்வராஜை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தலையில் 4 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது பழைய குற்றவாளிகளின் உருவம் அடையாளம் காட்டியது. இதன் அடிப்படையில், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே பதுங்கியிருந்த ரவுடி வேல்ராஜ்(எ)சொறி(40), இவரது கூட்டாளிகளான கோபிகிருஷ்ணன்(53), விஜயகுமார்(எ) வெள்ளை விஜி(48), சதீஷ்குமார்(38) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.