கத்திப்பாரா ஜெனார்த்தனன் பிறந்த நாளில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை: அமைச்சர், எம்எல்ஏ வழங்கினர்

சென்னை: மூத்த அரசியல் தலைவரும் TEMOWA நலச்சங்க நிறுவனத் தலைவருமான மறைந்த கத்திப்பாரா ஜெனார்த்தனனின் 77வது பிறந்த நாள் நிகழ்ச்சி, நேற்று கிண்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், கத்திப்பாரா ஜெனார்த்தனன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் மூலமாக, லாரி மற்றும் மண் அள்ளும் இயந்திர தொழிலை சார்ந்த, நன்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் கல்வி உதவி தொகை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

இதில் சங்கத் தலைவர் கத்திப்பாரா ஜெ.விவேக், மூத்த தலைவர் சைதை எம்.எஸ்.மணி, பொருளாளர் கே.ராஜசேகர், பொது செயலாளர் எஸ்.குணசேகரன், கவுரவ ஆலோசகர் டி.ரவிராஜா, துணை தலைவர்கள் மணலி ஏ.பாண்டியன், அத்திப்பட்டு எம்.கார்த்திகேயன், ஊத்துக்கோட்டை டி.பரந்தாமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ரேவண்ணாவுக்கு மருத்துவ பரிசோதனை

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா

மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு