கன்னட போராளிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், தலித் இயக்கங்கள் மற்றும் எழுத்தாளர்கள் மீது பாஜக ஆட்சியில் தொடரப்பட்ட பொய் வழக்குகள் வாபஸ் பெறப்படும் எனவும் சித்தராமையா உறுதி அளித்தார். புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் குழந்தைகளின் மனதில் விஷத்தை விதைக்கும் பாடங்களை அனுமதிக்க மாட்டோம் என கூறிய அவர், கல்வி ஆண்டு தொடங்கி உள்ளதால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.சட்டத்தை கையில் எடுத்து வகுப்பு வாத கலவரம் செய்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் எனவும் சித்தராமையா எச்சரித்துள்ளார்.