இதில், டிரைவர் ஹரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மகேந்திரா சிட்டி தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி டிரைவரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்க தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்தின் ஒரு பகுதியில் கயிறு கட்டி மற்றொறு கயிற்றினை சரக்கு வாகனத்தில் கட்டி இழுத்தனர்.
அப்போது, தீயணைப்பு வாகனத்தின் முன் பகுதி தனியாக பெயர்ந்து வருவது போல இருந்ததால் அந்த முயற்சியை கைவிட்டு அங்கு இருந்த பொது மக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்டனர். இச்சம்பவம் குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.