விழாவில் கலந்து கொள்ள வந்த இளைஞர்கள் சிலர் பைக்குகளில் வீலிங் செய்வது, பேருந்து முன் தண்டால் எடுப்பது, சாலையை மறித்து நடனம் ஆடுவது போன்ற அலப்பறைகளில் ஈடுபட்டனர். திருச்சி கொள்ளிடம் பாலத்தின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் மேலே டிவிஎஸ் 50ஐ தூக்கி வைத்து இளைஞர் ஒருவர் அதில் ஓட்டிச்சென்றார். இவ்வாறு சுமார் 1.5 கிமீ தூரம் அவர் டூவீலரை ஓட்டிச்சென்றார். இதை வேடிக்கை பார்த்த மக்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிந்து அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.