அவர் சோசியல் மீடியா வைத்திருக்கிறார். அதை வைத்து வைரல் செய்கிறார். அண்ணாமலை ஒரு வெத்து வேட்டு. காலி பெருங்காய டப்பா. அதில் வாசமே இருக்கும். உள்ளே ஒன்றும் இருக்காது. ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தவரை நற்குணங்கள் இருந்தது. அவர் நியாயவாதியாக இருந்தால் விளக்கம் சொல்லட்டும். நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எதிர்த்து ஓட்டு போடவில்லை என சொல்லட்டும். 11 எம்எல்ஏக்கள் போட்டார்கள் அல்லவா, அதை சொல்லட்டும். ஜெயலலிதா இருந்தவரை கவுரவமாக இருந்தோம். ஓபிஎஸ் பதவி ஆசையால் எல்லோரும் கேவலப்படுகிறோம்’’ என்றார்.