இந்நிலையில் ஊர்வியின் தந்தை அனில்குமார், தனது மகளை கான்பூரில் இருக்கும் அவரது வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்தார். திருமண கோலத்தில் தனது மகளை மகிழ்ச்சியாக அனுப்பி வைத்தது போன்று, விவாகரத்து ஆன பின்பும் மகளை மகிழ்ச்சியாக வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று நினைத்தார். அதற்காக ‘டிரம்ஸ்’ வாத்தியங்கள் முழங்க தனது வீட்டிற்கு மகளை அழைத்துவந்தார்.
இதுகுறித்து ஊர்வியின் தாயார் குசும்லதா கூறுகையில், ‘எனது மகள் மற்றும் பேத்தியுடன் வாழ விரும்புகிறேன். தம்பதிக்குள் பிரச்னை ஏற்பட்டதால், எனது மகள் ஊர்வி இரண்டாவது திருமணம் செய்து கொள்வார் என்று நினைத்தோம். ஆனால் அவர் தனது தந்தையின் நோக்கத்தை புரிந்துகொண்டார். தந்தையின் மனநிலையை புரிந்து கொண்ட அவர், தனது புதிய வாழ்க்கையை தொடங்கும் முன் கொஞ்சம் நாள் மகள் ஓய்வு எடுக்க வேண்டும்’ என்றார். விவாகரத்து பெற்ற மகளை அவரது கணவர் வீட்டில் இருந்து வாத்தியங்கள் முழங்க தனது வீட்டிற்கு அழைத்து வந்த தந்தையை பலரும் பாராட்டி வருகின்றனர்.