நோய் அதிகரிப்பு காரணமாக கொழுப்பு கல்லீரல் சிகிச்சை மையம்: அப்போலோ மருத்துவமனையில் தொடக்கம்

சென்னை: அப்போலோ மருத்துவமனை புதிதாக கொழுப்பு கல்லீரல் சிகிச்சை மையத்தை தொடங்கி உள்ளது. அப்போலோ மருத்துவமனையின் கல்லீரல் நோய் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை மையத்தை விரிவாக்கம் செய்து புதிதாக கொழுப்பு கல்லீரல் சிகிச்சை மையத்தை நேற்று தொடங்கி உள்ளது. மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கு (NAFLD) சிகிச்சை வழங்க இந்த கொழுப்பு கல்லீரல் சிகிச்சை மையம் பெரும் உதவியாக இருக்கும். இதனுடைய தொடக்க நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் பிரசாத் கலந்து கொண்டு ‘ஃபைப்ரோஸ்கேன் எக்ஸ்பர்ட் 630’ என்ற நோய் கண்டறியும் கருவியை அறிமுகப்படுத்தினார்.

அப்போலோ மருத்துவமனை கல்லீரல் நோய் நிபுணர் டாக்டர் முருகன் கூறுகையில், மாறிவரும் வாழ்க்கை முறை, உடல் உழைப்பு இல்லாத அமர்ந்த நிலையிலான வேலை முறைகள், அதிகரித்து வரும் மன அழுத்தம் போன்றவை காரணமாக கொழுப்பு கல்லீரல் நோய் நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. சிறுவயது நபர்கள் 35 முதல் 40 சதவீதம் பேர் கொழுப்பு கல்லீரலைக் கொண்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஃபைப்ரோஸ்கேன் 630 போன்ற தொழில்நுட்பங்கள், கல்லீரல் சேதத்தின் ஆரம்ப அறிகுறிகளை துல்லியமாக மதிப்பிட உதவுகிறது. இதனால் உரிய சிகிச்சை அளிக்க முடியும் என்றார்.

Related posts

ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் காலமானதை கேள்விப்பட்டு ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன்: அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்

கனமழை எச்சரிக்கை.. 2.66 கோடி செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது: பேரிடர் மேலாண்மை துறை தகவல்

அன்னூர் அருகே பாஜக பிரமுகர் விஜயகுமார் வீட்டில் கொள்ளைபோனது வெறும் ரூ.15 லட்சம் தான்: போலீசார் தகவல்